நல்ல வருமானம் கொடுக்கக்கூடிய நாட்டுக்கோழி வளர்ப்பு!
திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மருத்துவர். பீர்முகமதுவிடம் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்துக் கேட்டோம்.
“இப்போதைக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலா இருக்கு. சிறிய கொட்டகை மட்டும் அமைச்சுக்கிட்டு மேய்ச்சல் முறையில வளர்க்கிறப்போ அந்தக்கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்குது. ஆரம்பத்துல நல்ல வெடைக்கோழிகளை (முட்
டையிடும் பருவத்திலிருக்கும் கோழி) வாங்கி
வந்து வளர்க்க ஆரம்பிப்பதுதான் சிறந்த முறை.
கோழிகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் குடிக்க கிடைக்கிற மாதிரி பார்த்துக்கணும். மேய்ச்சல் நிலத்தில் சின்னச்சின்ன மண்பானைகளில் குளிர்ந்த தண்ணியை வைக்கலாம். கோடை காலத்தில், புரதச்சத்து நிறைய இருக்கிற தானியங்கள், காய்கறிக்கழிவுகள் கொடுக்கணும். குஞ்சிலிருந்து வளர்ந்த பருவம் வரை தவறாம தடுப்பூசிகள், மருந்துகளைக் கொடுக்கணும். அந்த விவரங்களை கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தெரிஞ்சுக்கலாம். வாராவாரம் சனிக்கிழமை அரசு கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தடுப்பூசிகள் போடுறாங்க. தடுப்பூசிகளைத் தவறாம போட்டாதான் கோடை காலத்தில் வரும் வெள்ளைக்கழிசல் மாதிரியான தொற்றுநோய்கள்ல இருந்து கோழிகளைக் காப்பாத்த முடியும். இப்போ தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துல வெள்ளைக்கழிசலைத் தடுக்கிற குருணை வடிவ மாத்திரைகளும் கிடைக்குது” என்றார்.
நன்றி விகடன்
திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மருத்துவர். பீர்முகமதுவிடம் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்துக் கேட்டோம்.
“இப்போதைக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலா இருக்கு. சிறிய கொட்டகை மட்டும் அமைச்சுக்கிட்டு மேய்ச்சல் முறையில வளர்க்கிறப்போ அந்தக்கோழிகளுக்கு நல்ல விலை கிடைக்குது. ஆரம்பத்துல நல்ல வெடைக்கோழிகளை (முட்

வந்து வளர்க்க ஆரம்பிப்பதுதான் சிறந்த முறை.
கோழிகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் குடிக்க கிடைக்கிற மாதிரி பார்த்துக்கணும். மேய்ச்சல் நிலத்தில் சின்னச்சின்ன மண்பானைகளில் குளிர்ந்த தண்ணியை வைக்கலாம். கோடை காலத்தில், புரதச்சத்து நிறைய இருக்கிற தானியங்கள், காய்கறிக்கழிவுகள் கொடுக்கணும். குஞ்சிலிருந்து வளர்ந்த பருவம் வரை தவறாம தடுப்பூசிகள், மருந்துகளைக் கொடுக்கணும். அந்த விவரங்களை கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தெரிஞ்சுக்கலாம். வாராவாரம் சனிக்கிழமை அரசு கால்நடை மருந்தகங்கள்ல இலவசமாவே தடுப்பூசிகள் போடுறாங்க. தடுப்பூசிகளைத் தவறாம போட்டாதான் கோடை காலத்தில் வரும் வெள்ளைக்கழிசல் மாதிரியான தொற்றுநோய்கள்ல இருந்து கோழிகளைக் காப்பாத்த முடியும். இப்போ தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துல வெள்ளைக்கழிசலைத் தடுக்கிற குருணை வடிவ மாத்திரைகளும் கிடைக்குது” என்றார்.
நன்றி விகடன்
No comments:
Post a Comment